ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?
முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.
"கணக்கதிகாரம்"
கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்
"கீற்றெண்ணி முத்தித்துக் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று மற்றும் ஆறு மற்றும் ஐந்தால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வரும் விடையே விதைகளின் எண்ணிக்கையாகும்.
ஒரு பூசணிக்காயில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3 மற்றும் 6 மற்றும் 5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அதாவது அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.
தமிழனின் அறிவும் அவன் கணித அறிவுத்திறனும் பெரும் வியப்பிற்குரியது என்பதை அக்காலம்தொட்டே நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார்கள்
எனினும் நம்மவர் திறனை போற்றவும் அவரை காக்கவும் எவரும் முன்வராததே வருத்தம்.
தமிழ் மொழி காப்போம் தமிழரின் பெருமைகளை போற்றுவோம்
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க...!!!
#படித்ததில்_ரசித்தது
No comments:
Post a Comment