மொழி என்பது நமது எண்ணங்களில் தோன்றும் விசயங்களை பகிரவும் கருத்துக்களை பரிமாறவும் உருவானது. மனிதன் தோன்றிய காலம் தொட்டு மொழியானது ஒலி வடிவில் உள்ளது.
உலகில் பல மொழிகள் உள்ளன அவற்றுள் மனிதனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் உண்ணத மொழிதான் நமது தாய்மொழி தமிழ். தமிழ் மொழியினுள் இல்லாத கருத்துக்களோ இலக்கியங்களோ வேறு எந்த மொழியிலும் இல்லை. இத்தகைய தமிழ் மொழிதான் தமிழருக்கு ஆயக்கலை என 64 கலைகளை எடத்துரைத்துள்ளது. அவற்றுள் ஒன்றை நாம் காண இருக்கிறோம்.
ஆயக்கலையான 64லில் நாம் இப்போது பார்க்க இருப்பது 61வதாக வரும் 'பிறமொழி எழுத்து அறிதல்'. அஃதாவது பிற மொழி எழுத்தை பார்த்து இது இன்ன மொழி என சொல்வதை குறிக்கவில்லை, பிற மொழியை எழுத படிக்க கற்றுக்கொள்வதை குறிக்கிறது. ஆகையால் உங்களால் முடிந்த வரை பிற மொழிகளை பயிலுங்கள் பயில்வதோடு மட்டுமல்லாது அம்மொழியிலும் புலமை பெற்றிடுங்கள்.
ஆனாலும் எந்த மொழியையும் பிறரின் கட்டாயத்திற்காகவோ அல்லது வேண்டாத வெறுப்பாகவோ படிக்க வேண்டாம். மேலும் பண்டைய தமிழகத்தில் நம் மக்கள் பிற மொழிகளை ஆவலுடன் கற்றதால்தான் கடல் கடந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது மேலும் கடல் கடந்த வணிகங்களையும் தமிழன் மேற்கொண்டான்.
தமிழன் என்பதில் பொருமிதம் கொள்வோம், தமிழின் தரம் தாழ்ந்திடாமல் பிற மொழிகளை கற்போம். மீண்டும் தமிழனே உலகின் சிறந்தவன் என்ற நிலையினை உருவாக்குவோம்.
No comments:
Post a Comment