அன்பே விஜி,
உன்னுடைய கோபத்தையும் நான் ரசிக்கிறேன், பல்லே முழைத்திடாத குழந்தை கடித்தால் என்ன வலி உண்ணடாகுமோ அல்லது அக்குழந்தையின் நகமில்லாத விரலின் கீரல்தான் என்ன வலி தருமோ அல்லது நடை பயிலும் குழந்தையின் உதைபட்டு என்ன வலி உண்டாகுமோ அது போல்தான் உன் செல்ல கோபம் என் மனதில் வலியை உண்டாக்குகிறது இந்த வலி பட்ட நான் உன்னை ரசிப்பதா? அல்லது வருந்துவதா? பதில் நீயே சொல்...
உன்னுடைய மௌனத்தை வெறுக்கிறேன், கண் முன்னே நீ இருந்தும் நான் கண் சிமிட்டி உன்னை அழைக்கையில் என்னை கண்டும் காணாதது போல நீ இருக்கையில் அல்லது அருகில் பலருமிருக்க நான் மிக மெல்லிய குரலில் உன்னை அழைக்கையில் என் குரல் கேட்டும் கேளாதது போல் இருக்கையில் அல்லது கை ஜாடையிட்டு நான் கூப்பிடுகையில் கவனித்தும் கவனிக்காதது போல இருக்கையில் உன் மௌனம் என்னை வதைக்கிறது. உண்மை சொல் அன்பே உனக்கு எல்லாமே தெரியும்தானே? பதில் நீயே சொல்...
பதில் நீயே சொல்...